நாங்களும் ஏழைகள் - Poetry submission from S.Prasanna

Hello friends social networking, on this occasion the admin wants to share an article entitled நாங்களும் ஏழைகள் - Poetry submission from S.Prasanna, we have made good, quality and useful articles for you to read and take information in. hopefully the post content is about Articles, Entertainments, which we write you can understand. Alright, happy reading.

நாங்களும் ஏழைகள்தான் !

கொரோனாவின்
கொடிய துவக்கத்தால்
எம்
பஞ்சப்படியின் உயர்வை
நிறுத்தினீர்கள் ;
உலகே துவள்கையில்
நியாயமென
உணர்ந்தோம் ;
உறுதுணையிருந்தோம் .

இப்போது
இதுவும் கடந்து போகும் ;
போகும் வரை
பொறுத்தே வாழணுமென
உலகும் ,ஊரும்
வாழத் துவங்கி விட்டது.

காய்கறிகாரன்
யானை விலை , குதிரை விலை
சொல்கிறான்.
மின்கட்டணமோ
கொள்ளை விலை;
பேருந்து கட்டணம் ..
எப்போது ஒடினாலும்
எட்டாத உயரமாய் ஏறியபடியே ..
இரயில் கட்டணமோ ...
உயர்வின் உச்சத்தில்..
வாடகைக்காரர்கள்
எப்போதும் இல்லா உயர்வை
இப்போது உயர்த்துகின்றனர்.
தங்கம் விலையோ
எட்டாக் கனி ஆச்சு.
சேமிப்பு எனப் பார்த்தால்
செலவுக்கே என்றாச்சு ..

நடக்காத கல்விக்கு
செல்லாத பள்ளிக்கு
கல்விக்கட்டணம்
கட்டிய தொகை
நடக்கும் போது
தந்ததை விட
பத்து மடங்கு அதிகம்.
பெண்ணுக்கு கல்யாணச் செலவிருப்பவன்
கதையைக் கேட்டால்
கோவிட் -19 ஏ
பரவாயில்லை எனத் தோணும்.

மாநில அரசு ஊழியர்கள் ,
ஆசிரியர்களோ ...
இந் நாட்டு நிஜ ராஜாக்கள்,
வேலைக்கும் செல்லத் தேவையில்லை,
சம்பளத்துக்கும் குறைவில்லை.

கொஞ்சம்
தபால் - ஆர்.எம்.எஸ்.,
ஊழியர்களை
யோசியுங்கள்,.
ஊரடங்கின்
முதல் நாள்
முதல்
இன்னாள் வரை
எங்கட்கு
பொது விடுப்பே இருந்ததில்லை.
கோவிட் வந்தாலும்
புயல் வந்து கோரத்தாண்டவமாடினாலும்
எங்கள் பணி அத்தியாவசியமே.
நாங்களும்
மறுக்கவில்லை; மறக்கவில்லை.
பணிக்கு
சென்று கொண்டே இருக்கிறோம் ...

ஆனால்
ஊரே , உலகே
கோவிட் கொடுமையிலும்
வாழ்வாதாரத்தை பெருக்குகையில்
எம் நிதி ஆதாரத்தை
இன்னும்
நிறுத்தலாமா ?

நாங்கள் அனைவருமே
செல்வர்களல்ல ?
ஒரு சதவீதம் பேர்
லட்சாதிபதிகளாய்
இருக்கலாம்.,
அவ்வளவே ..!

ஆக,
நிஜமாகவே
நாங்கள்
நிதி ஆதார உயர்வுக்காய்
பஞ்சம்தான்
படுகின்றோம்,
கஷ்டம்தான் படுகின்றோம்.

ஆக,
இன்னும் நிறுத்தாமல்
இனியும் நிறுத்தலாமாவென
யோசிக்காமல்
நிறுத்தி வைத்த
பஞ்சப் படி உயர்வை
தந்திடுங்கள்.

நிலுவைத் தொகையெல்லாம்
நாங்கள்
கேட்கவில்லை.
இனி வரும்
உயர்வையேனும்
நிறுத்தாதீர்கள்
என்றே
மன்றாடுகிறோம்,.

எல்லோர் குரலையும்
கேட்பவர்கள்
எங்கள்
குரலையும்
ஒர் முறை கேளுங்களேன் ..!


sender ;

S.PRASANNA ,

Ch.PSO/1 ,
Chennai sorting Dvn,
Egmore, ch – 8.

girigayathara@gmail.com


That's the article: நாங்களும் ஏழைகள் - Poetry submission from S.Prasanna
Thank you for visiting my blog, hopefully it can be useful for all of you. Don't forget to share this article with your friends so they also know the interesting info, see you in other article posts.

You are now reading the article நாங்களும் ஏழைகள் - Poetry submission from S.Prasanna with link address https://socialnetworkingupdate.blogspot.com/2021/06/poetry-submission-from-sprasanna.html

More Articles

Post a Comment

Mas Bago Mas luma

Iklan In-Feed (homepage)

#Advertisement